பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி - நூலகம்
பெரியார் புரா
 
பெரியார் ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்
 
நாகம்மை ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்
 
 
 

 

முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டின் - தமிழக அரசின் அறவழிச் செயல்பாடுகளை
அலட்சியப்படுத்தாதீர்கள் - கடும் விலை கொடுக்க நேரிடும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரால் இலங்கை அரசு தமிழர்களைக் கொன்றொழிக்கும் கண்மூடித்தனமான போருக்குப் பிறகும் - இந்திய அரசு பொறுமை காட்டுவதைக் கண்டித்தும், தமிழர்களின் பொறுமையைப் பலவீனமான ஒன்றாகக் கருதக்கூடாது என்பதை வெளிப்படுத்தியும், வரும் தேர்தலில் அரசியல் ரீதியாக அதன் எதிர்விளைவு இருக்கும் என்பதைத் தெரிவித்தும், தமிழ்நாட்டின் அறவழிச் செயல்பாடுகளை அலட்சியப்படுத்தினால், கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

  மேலும்

திராவிடர் கழகம் இருப்பது நாட்டுக்கு
நல்லது என முதல்வர் கலைஞர் கூறினார்

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு பேச்சு

திண்டுக்கல், நவ. 19- திராவிடர் கழகம் இருப்பது நாட்டுக்கு நல்லது என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூறிய செய்தியை எடுத்துக்காட்டி போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு உரையாற்றினார்.

திண்டுக்கல்லில் 15-11-2008 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பாராட்டுகின்றவர் பாராட்டினால்தான்

பாராட்டுரை என்பது யார் பாராட்டினாலும் அது பாராட் டுரை அல்ல. பாராட்டுகின்ற வர்கள் பாராட்டினால்தான் அந் தப் பாராட்டுக்கே ஒரு பெருமை (கைதட்டல்).

  மேலும்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பினர் பேரணி

இலங்கையில் போர் நிறுத்தம்
செய்யவேண்டும், தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும்

மாணவர் பேரணியைத் தொடங்கி வைத்த தமிழர் தலைவர் கோரிக்கை!

சென்னை, நவ. 19- நமக்கு ஒரே இலக்குதான், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்; தமிழர்கள் காப்பாற்றப் படவேண்டும் என்றார் தமிழர் தலைவர்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப் பான, முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில், இந்திய அரசே போரை நிறுத்து, ஈழத் தமிழர்களைக் காப்பாற்று என்ற கோரிக்கையை வலி யுறுத்தி நேற்று (18-11-2008) பிற்பகல் 3 மணியளவில், மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் வரை எழுச்சிப் பேரணி நடைபெற்றது.

  மேலும்
 




 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai