பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி - நூலகம்
பெரியார் புரா
 
பெரியார் ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்
 
நாகம்மை ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்
 
 
 

 

முக்கிய செய்திகள்

மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம்
ஜூலை 10 இல் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு றீபொதுத்துறை பங்குகள் விற்பனை
ஈழத் தமிழர்கள் இன்னல்

மூன்று முக்கிய பிரச் சினைகளை முன்னிறுத்தி ஜூலை 10 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ள அறிக்கை வருமாறு:
நாடாளுமன்றத் தொடர் கூட்டம் - அதிலும் பட்-ஜெட் தொடர் துவங்கு முன்பே, அவசர அவசர-மாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு முறையே ரூபாய் நான்கும், இரண்டும் ஆக உயர்த்தப்-பட்டதை எதிர்த்து நேற்று (2_7_2009) நாடாளுமன்றத்-தின் இரு அவைகளிலும் மிகப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!
முதல்கட்ட நடவடிக்கையே பாதகமானது!



  மேலும்

விரிந்த அன்பு, வெல்ல முடியா விருந்தோம்பலுக்குரியவர்கள்
வள்ளல் வீகேயென் கண்ணப்பன் குடும்பத்தினர்!
தமிழர் தலைவர் மனந்திறந்து பூரிப்புடன் பாராட்டு

குற்றாலத்தில் வீகேயென் கட்டடத்தை தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்து வைக்கிறார். அருகில் வீகேயென் குடும்பத்தினர் (20.6.2009).

குற்றாலம், ஜூலை 3_ விரிந்த அன்பையும் சிறந்த விருந்தோம்பலையும் என்றைக்கும் காட்டி மற்றவர்கள் இவர்களைப் பின்பற்றி வாழக் கூடியவர்களாக திகழக் கூடிய குடும்பம் தான் வள்ளல் வீகேயென் கண்ணப்பன் குடும்பம் என்று புகழாராம் சூட்டினார் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
குற்றாலத்தில் 20.6.2009 அன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்ற வீகேயென் கட்டட திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

  மேலும்

மாதா பாதத்திலிருந்து தண்ணீர் வருகிறது என்ற புரட்டு!
பக்தி வியாபாரம் வெகு ஜோர்!

மனித வாழ்வில் முக்கிய ஆதாரம் பணம்! பணம் இருந்தால் பிணமும் வாய் திறக்கும், பணம் பாதாளம் வரை பாயும் என்பது எல்லாம் பணத்தின் தன்மையை வெளிப்படுத்தும் பழமொழிகள். அந்தப் பணத்தினை சம்பாதிக்க மதத்தினைப் பயன்படுத்தி மூடநம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் இன்றளவும் எத்தனையோ கோவில்கள் கொள்ளைக்கூடாரங்களாக மாறி வருவது அனைவரும் அறிந்ததே! அந்த வரிசையில்....
வாடிப்பட்டியில்....
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலம் என்ற பெயரில் ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் தண்ணீரை ஏசுவின் அரு மருந்து என்று காசுக்கு விற்று கூட்டத்தை கூட்டி வருமானத்தால் வளங்கொழித்து வரும் திருத்தலத்தின் முந்தைய நிலையைப்பற்றி பூர்வீகமாக வாழ்ந்து வருபவர்களை கேட்டால் வேடிக்கை-யாகச் சொல்வார்கள் இந்த இடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டியில் மேற்கு பகுதியில் பொன்பெருமாள் கரடு என்றழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் அருள்மிகு வல்லபகணபதி நகரில் கிணற்று நீரை நம்பி விவசாயம் செய்யும் நிலமாக இருந்து வந்தது.

  மேலும

 





இன்றைய கருத்துப்படம்

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai