விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பினர் பேரணி
இலங்கையில் போர் நிறுத்தம்
செய்யவேண்டும், தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும்

மாணவர் பேரணியைத் தொடங்கி வைத்த தமிழர் தலைவர் கோரிக்கை!
சென்னை, நவ. 19- நமக்கு ஒரே இலக்குதான், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்; தமிழர்கள் காப்பாற்றப் படவேண்டும் என்றார் தமிழர் தலைவர்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப் பான, முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில், இந்திய அரசே போரை நிறுத்து, ஈழத் தமிழர்களைக் காப்பாற்று என்ற கோரிக்கையை வலி யுறுத்தி நேற்று (18-11-2008) பிற்பகல் 3 மணியளவில், மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் வரை எழுச்சிப் பேரணி நடைபெற்றது. |